சென்னையில் கடந்த சில தினங்களாக காலையில் வெப்பம் அதிகரித்து வந்தாலும், மாலை வேளைகளில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகள் குளிர்ந்தன.

பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், தியாகராய நகர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேலும், திருவல்லிக்கேணி, சூளைமேடு, ராயப்பேட்டை, போரூர் மற்றும் கொளத்தூரிலும் கனமழை பெய்து வருகிறது.
காலை முதல் வெயிலில் சிக்கி தவித்த மக்களுக்கு அதிகாலையில் பெய்த மழை குளிர்ச்சியை தந்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.